Thursday, December 10, 2015

சொல்லித்தான் பாரேன் ஹரி நாமத்தை அது அள்ளித்தரும் அருளை

Nama Article 10th December 2015


Sri Sri Muralidhara Swamiji's Kirtan


ராகம்: ஆபேரி                                     தாளம்: ஆதி


சொல்லித்தான் பாரேன் ஹரி நாமத்தை

அது அள்ளித்தரும் அருளை



பள்ளியில் ஓதி வந்த சிறுவனை

பாகவத அரசனாக முடிசூட்டியது


ஆனைக்கும் அன்று துணையாக வந்தது

மனை தோறும் ஒலிக்க மங்களம் தருவது


வினைகளையெல்லாம் வேரறுக்க வல்லது

நினைத்த மாத்திரத்தில் துணையாக வருவது


ராகம்: கரஹரப்ரியா


நாமம் சொல்லுவோம் வாரீர் - சதா ஹரி

நாமம் சொல்லுவோம் வாரீர்                        

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே


நாமம் சொல்ல சொல்ல பாவம் பறந்திடும்

நாமம் சொல்ல சொல்ல புண்யம் சேர்ந்திடும்  (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல துன்பம் விலகிடும்

நாமம் சொல்ல சொல்ல இன்பம் பெருகிடும்  (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல கவலை கலைந்திடும்

நாமம் சொல்ல சொல்ல அமைதி நிலைத்திடும் (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல வாசனை அழிந்திடும்

நாமம் சொல்ல சொல்ல பிறவிகள் குறைந்திடும் (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல மனது ஒருமுகமாகும்

நாமம் சொல்ல சொல்ல அறிவு கூர்மையாகும்  (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல ஆபத்துகள் அகன்றிடும்

நாமம் சொல்ல சொல்ல விபத்துகள் விலகிடும்  (ஹரே ..)


நாமம் சொல்ல சொல்ல பக்தி விரக்தி வளர்ந்திடும்

நாமம் சொல்ல சொல்ல ஞானம் உதித்திடும்    (ஹரே ..) 


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: